ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர்  பலியாகினர்.

அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்தன. திடீர் நிலச்சரிவால் 44 பேர் இடிபாடுகளில் புதைந்து பலியாகினர். மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.