
சென்னை:
அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:
கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை புயல் வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும். ஆகவே, மீனவர்கள் இரு நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்” – இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel