சென்னை :

சென்னையில் மழை விட்டு விட்டு பெய்யும், வட தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில்  கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய மேற்குவங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக புதுக்கோட்டை, திருமானூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் விட்டு விட்டு மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் ஜூன் 1 ம் தேதி முதல் செப் 25 வரை 39 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 31 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]