திருப்பதி

லங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி வந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று திருப்பதிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வந்துள்ளார். இவருடன் இவர் மனைவி மைத்ரி விக்ரமசிங்கேவும் வந்துள்ளார். இவர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வந்துள்ளனர். நேற்று ரணில் விக்ரமசிங்கேவை ஆந்திர அரசின் சார்பில் அம்மாநில அமைச்சர் அமர்நாத் ரெட்டி வரவேற்றார்,

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பிலும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்றிரவு திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று அதிகாலை அவர் தனது மனைவியுடன் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.

திருமலை மற்றும் திருப்பதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கெடுபிடிகளால் பக்தர்கள் கடும் துயரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.