கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயல் கரையைக் கடந்துள்ளது.

சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் வீசிய பிப்பர்ஜாய் புயல் குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மையம் அப்போது  காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாகத் தெரிவித்துள்ளது. புயலால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த புயல்  வடகிழக்கு நோக்கி அதாவது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து பாலைவனத்தை அடையும் நேரத்தில் வலுவிழந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை தொடரும் என்றும், இதே நேரத்தில் ராஜஸ்தானில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் சூறாவளிக் காற்று மாலை 6:30 மணியளவில் வீசத் தொடங்கி கட்ச் மாவட்டத்தில் மணிக்கு 125 கிமீ வேகத்தில் வீசிய காற்றால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பிகள் சாய்ந்தும் விழுந்தன. இவ்வாறு மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தபோது நடந்த விபத்துகளில் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் 23 விலங்குகளும் பலியாகியுள்ளன, குஜராத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் பலத்த  காற்று ஆகியவற்றால் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சுமார் 940 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மொத்தம் 1,600 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட குஜராத்தில் 94,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இவர்களில் சிலர் ஆபத்தான பகுதியில் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.