சண்டிகர்:

வேதமந்திர பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவில் மனோகர் லால் கத்தார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது.
இந்த நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கட்டாய வேத மந்திர பயிற்சி எடுக்க ஆசிரியர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
திருவிழாவின்போது, வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும், பூஜையில் ஈடுபட வேண்டும், பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பாஜகவின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், கட்டாய வேத மந்திர பயிற்சியில் பங்கேற்க பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதற்கான உரிய காரணத்தை விளக்காவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.