ஹிசார்:

ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் உக்லானா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த சிறுமி நேற்று இரவு வீட்டில் தாயாருடன் தூங்கினார். காலையில் தாயார் எழுந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. அங்குள்ள குளம் அருகே ரத்த காயங்களுடன் பிறப்புறுப்பில் குச்சி சொருகிய நிலையில் பிணமாக கிடந்தார். வாயிலும் ரத்தம் வடிந்திருந்தது.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. குற்றவாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடையடைப்பும் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.