அமெரிக்காவே நமது பிரதான எதிரி. பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியாவால் தேடப்பட்டுவரும் தீவிரவாதியான ஹஃபீஸ் சையீத்.

terrorist

26/11 மும்பை தாக்குதலின் மாஸ்டர்மூளை என்று வர்ணிக்கப்படும் ஹஃபீஸ் சையிதின் இந்த அந்தர் பல்டி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேலும் அவர் பாக். அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அரசின் பலவீனமான நடவடிக்கைகளால் ஜிகதிகளின் தலைவன் பர்ஹான்வானியை இழக்க நேரிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இப்படி ஒருபக்கம் சொல்லியிருக்க இன்னொரு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் இதற்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.
இவரும் பாக் அரசை கடுமையாக சாடுகிறார். காஷ்மீர் பிரச்சனை மற்றும் 1971 இந்தியாவுடனான போரில் ஏற்பட்ட தோல்வி ஆகியவை அனைத்துக்கும் மொத்தமாக கணக்குத் தீர்க்க இந்தியாவுக்குள் அதிகமான முஜாகிதீன்களை (தீவிரவாதிகளை) அனுப்ப பாக். அரசு முன்வர வேண்டும். இறைச் சித்தம் இருந்தால் இதன் மூலம் நாம் இந்தியாவுக்கு சரியான பாடம் கற்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.