குருகிராம்: அரியானா குருகிராம் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயம் அடைநதனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தவுள்தாபாத் அருகே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது,.  குருகிராம்-துவாரகா எக்ஸ்பிரஸ்  சாலையில், கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலதின் ஒரு பகுதி, நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.