டில்லி:

ராணுவ வீரரை சராமரியாக அடித்த பெண்ணுக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டில்லி குர்கான் பகுதியை சேர்ந்தவர் ஸ்மிருதி கல்ரா (வயது 44). விவாகரத்து பெற்ற இவர் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி குஞ் பகுதியில் ஒரு ராணுவ வீரரை கல்ரா தொடர்ந்து கண்ணத்தில் அடித்தார். அடித்துவிட்டு தனது காரை நோக்கி நடந்தார்.

இந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வைரலாகியது. ராணுவ வீரர்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றின் முன்னாள் கல்ரா தனது இண்டிகா காரை நிறுத்தியிருந்தார். ராணுவ வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதா என்பது உறுதியாகவில்லை.

எனினும் அவர் கண்ணத்தில் அரைந்த வீடியோ காட்சியை கொண்டு அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் டில்லி நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.