அகமதாபாத்:
பிஎல் தொடரின் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டத்தை வென்றது.

குஜராத் – ராஜஸ்தான் அணி இடையே நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.