அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அந்தந்த மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகளும், கல்லூரிகளும் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் குஜராத் மாநிலத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். முன்னதாக ஜனவரி 11ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.