காந்திநகர்,

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், போர்பந்தர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான  அர்ஜூன் மோத்வாடியா, தனது வாக்குப்பதிவை பதிவு செய்துவிட்டு, வாக்குச்சாவடியை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள், ப்ளூடூத்துடன் இணைத்து முறைகேடு நடைபெற்று வருகிறது என்று புகார் கூறினார். மேலும்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், அதைத்தான்  படம்பிடித்து ஆதாரமாக வைத்திருப்பதாகவும்  அவர் கூறி உள்ளார்.

இதன் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.