போபால்

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் மத்தியபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமர் ஆனதும்  குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவி ஏற்றார்.   அதன்பிறகு அவரது வயது காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  தற்போது நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலிலும் அவர் போட்டி இடவில்லை.    குஜராத்தின் முதல் பெண் முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது மத்திய பிரதேச மாநில ஆளுநராக ஆனந்தி பென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    இவருக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன.  குஜராத் பாஜக வில் இருந்து ஏற்கனவே வாஜுபாய் வாலா கர்நாடக மாநில ஆளுநராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.   தற்போது அதே மாநிலத்தை சேர்ந்த ஆனந்தி பென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.