டில்லி

ன்று நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்,

”கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘மொலாசஸ்’ மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக  குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் கரும்பு விவசாயிகள் பலனடைந்து, அவர்களது கடன் தொகையை விரைவாகச் செலுத்த முடியும். 

பாக்கெட் மூலம் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாவு, விற்கப்பட்டால் அதற்கான ஜி.எஸ்.டி. வரி 5% ஆக குறைக்கப்படும் தவிர, பாக்கெட் செய்யப்படாத சிறுதானிய மாவுக்கு ஜி.எஸ்.டி. வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. 

ENA எனப்படும் தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே விடப்பட்டுள்ளது., தொழில்துறை உபயோகத்திற்கான தூய்மையான ஆல்கஹால் மீது 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்” 

என்று கூறியுள்ளார்.