மும்பை: ஜெட் ஏர்வேஸுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், தாங்கள் $700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, எபிஐ வங்கியின் முதலீட்டு அமைப்பான எஸ்பிஐ கேப்ஸ் -க்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்கள் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் குழுவினர்.

இந்த ஊழியர்கள் குழுதான், தேவைப்படும் நேரத்தில், ஏல செயல்பாட்டில் பங்கேற்க உறுதியளித்துள்ள குழு.

இந்த மின்னஞ்சல் கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலில், ஜெட் ஏர்கிராஃப்ட் பராமரிப்பு பொறியாளர் நலவாரியச் சங்கம் மற்றும் இந்திய விமானிகளின் நலவாரியச் சங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், உங்களுக்கு எப்போது தேவையென்றாலும் உதவிட தயாராக இருப்பதாக, எஸ்பிஐ முதலீட்டு அமைப்பிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மே மாதத்தின் தொடக்கத்தில், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் குழு, எஸ்பிஐ முதலீட்டுப் பிரிவின் அதிகாரிகளை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.