மேட்டுப்பாளையம்
நேற்றிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஏத்தி திவ்யப்ரியா கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்யப்ரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். நேற்று மாலை திவ்யப்ரியா, அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா அதாவது காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றுள்ளனர்.
அந்த காரை பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்தநிலையில் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது, கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்ததில், திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திவ்யப்ரியா, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]