ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த தடுப்பூசி இறுதி கட்ட ஆய்வுக்குப் பின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை முழுவீச்சில் இதனை தயாரிக்கும் பணியில் பயோலொஜிக்கல்-இ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த புதிய தடுப்பூசியை யாருக்கும் வழங்காமல் இந்திய மக்களின் பயன்பாட்டுக்காக வைத்திருக்குமாறு மத்திய அரசு அந்நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், 30 கோடி டோஸ்களுக்கு ரூ. 1500 கோடி முன்பணம் கொடுக்க இருப்பதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.