சென்னை: இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்கள் முடக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் கூறியுள்ளார்.

பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்  தடை செய்யப்பட்டு உள்ளது குறித்து பாராளுமன்றத்தில்  உறுப்பினரின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில்,  மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ் பயனர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யும் மொபைல் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பாதுகாப்பற்ற  320 மொபைல் அப்ளிகேஷன்கள் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் அப்ளிகேசன்கள் மீண்டும் தடை செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு  உறுப்பினரின் கேள்விக்கு அளிறக்கப்பட்டுள்ள பதிலில், இந்தியாஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2021 வரை சீனாவிடமிருந்து 2.45 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI)  பெற்றுள்ளது என்றும்  தெரிவித்துள்ளார்.