டெல்லி: ரஷ்யா உக்ரைன் போரால், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு ஓராண்டு சிறப்பு சலுகை வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக அங்கு மருத்துவம் மற்றும் உயர்கல்வி படித்து வந்த ஆயிரக்கணக் கான இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பினர். அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.உக்ரைனில் திரும்பியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என இந்திய அரசை அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும்,  இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகையாக, மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு க்ரைன் அரசு வழங்கி இருப்பதாகவும்,  நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் உக்ரைனில் போரை உடனடியாக நிறுத்துவதற்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது என்றவர், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இரு நாட்டின் தலைவர்களிடமும். இது தொடர்பாக பிரதமர் அவர்கள் இருவரிடமும் பேசினார். ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் டெல்லி வந்த போது அவருக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி இதுதான் என்று கூறினார்.