சென்னை:

பஸ் கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனம் செய்திருக்கும். பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துவிட்டு இப்போது கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்.

முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லக் கூடிய வல்லுனர்கள் அரசுப் பணியில் உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே’’ என்று தெரிவித்துள்ளார்.