சென்னை:

ரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின்  மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்வதாக எடப்பாடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக  முதல் கட்டமாக 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தமிழகஅரசின் இந்த அறிவிப்பால்,  பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.