திப்ரூகர்: அசாமில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அம்மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நஹர்காத்தியா ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.

ப்போது, திடீரென அதன் 7 பெட்டிகளும் தடம் புரண்டன. இதனால் அவ்வழியாக வரும் 19 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்கள் அனைத்தும் மாற்று வழியில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சரக்கு ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது