டில்லி:

கடந்த 4 நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே  பதற்றத்தை ஏற்படுத்தி வந்த, இந்திய வீரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடிவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விடுதலை செய்த  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பத்திரமாக நேற்று இரவு வாகா எல்லையில் பத்திரமாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இருநாட்டு அதிகாரிகளும் ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்ட பின், அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.

அப்போது,’ என் நாட்டிற்கு திரும்பியது நல்லது’ என்று அபிநந்தன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நேற்று இரவு 9 மணிக்கு மேல், அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது இந்திய மண்ணில் அவரது கால் மீண்டும் பதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பியது நல்லது என்று கூறினார்.

அதுபோல அபிநந்தனை திரும்பப் பெற்றதில்  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று இந்திய   ஒரு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப் படையை இந்திய விமானப்படையினா் பதிலடி கொடுத்து விரட்டியடித்தனா். இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய போது இந்திய விமானப்படையைச் சோ்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டாா்.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று F16 ரக பாகிஸ்தான் போா் விமானத்தை தாக்கினாா். அப்போது அபிநந்தன் சென்ற மிக் 21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளாதைத் தொடா்ந்து வேறு வழியின்றி அபிநந்தன் பாராசூட் உதவியுடன் பாகிஸ்தான் எல்லையில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தான் எல்லையில் தரையிரங்கிய அபிநந்தனை சிலா் தாக்குவது போன்ற காட்சிகளும், அபிநந்தன் ரத்தம் வடிந்த முகத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

பின்னா் மாலையில் அபிநந்தன் இயல்பாக டீ குடிப்பது போன்றும், பிறா் கேட்கும் கேள்விகளுக்கு அவா் இயல்பாக பதில் அளிப்பது போன்ற காட்சிகளை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இது பதற்றத்தை ஓரளவு த/ணத்து.

பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிரங்கிய அபிநந்தனை  ஜெனிவா ஒப்பந்தப்படி நடத்த வேண்டும் என்றும், அவரை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா உள்பட  உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன. இதனைத் தொடா்ந்து அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவாா் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் அறிவித்தாா்.

அதன்படி இன்று பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா். இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

அட்டாரி எல்லைக்கு வந்த அபிநந்தனை இந்திய ராணுவத்தினர் வரவேற்றனர்.  பாகிஸ்தானில் இருந்து 75 மணி நேரத்திற்கு பின் வாகா எல்லையிலிருந்து, இந்தியாவின் அட்டாரி எல்லைக்குள் அபிநந்தன் பிரவேசித்த போது, அங்கே கூடியிருந்த மக்கள் அவருக்கு கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை அதிகாரி ஆர்.ஜி.கே. கபூர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அபிநந்தனுக்கு வழக்கமான நடைமுறைப்படி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அபிநந்தன் விமானத்தில் இருந்து வெளியேறிய போது காயம் ஏதாவது ஏற்பட்டதா என்பது பற்றி மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என ஆர்.ஜி.கே. கபூர் கூறினார்.

முன்னதாக, அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் இருமுறை நேரத்தை மாற்றியது. அவர் தொடர்பான ஆவணங்களை சோதனை செய்தனர். அதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாயகம் திரும்பியுள்ள அபிநந்தனுக்கு இந்திய மக்களும், காஞ்சிபுரத்தில் வசிக்கும் அவருடைய உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.