டெல்லி:

கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோ-ஏர் விமான நிறுவனம் ஊரடங்கு முடிவடைந்தவுடன், வரும் 15ந்தேதி முதல்  மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து சேவைகளும் வழக்கம் போல தொடரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. அதே வேளையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற சந்தேகத்தை எற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பிரபல விமான நிறுவனமான கோஏர் விமான நிறுவனம், தனது உள்நாட்டு விமான சேவைகளை வரும் 15ந்தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. சர்வதேச விமானசேவை மே1ந்தேதி முதல் தொடங்கும் என்றும் கூறி உள்ளது.

அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.