டில்லி:

கணைய பிரச்னை காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தற்போது குணமடைந்து வருவதால் இந்த மாத மத்தியில் அவர் நாடு திரும்புவார் என்று பாஜக கோவா மாநில பொதுச் செயலாளர் சதானந்த் தானவடே தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எப்போது வருவார் என்ற தேதியை சரியாக குறிப்பிடவில்லை.

அவர் மேலும் கூறுகையில், ‘‘மனோகர் பாரிக்கர் குணமடைந்து வருகிறார். விரைவில் திரும்பி வருவார். டாக்டர்கள் அனுமதி வழங்கிய பின்னர் அவர் இந்தியா வரும் தேதி முடிவாகும்’’ என்றார். வரும் 15ம் தேதி அவர் இந்தியா திரும்புவார் என்று கோவா மாநில மூத்த அமைச்சர் சுதின் தவாலிகர் தெரிவித்துள்ளார்.