னாஜி

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 25ஆம் தேதி பனாஜி நகரில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    அங்கு சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறியதை அடுத்து நேற்று அவர் வீடு திரும்பி உள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் மனோகர் பாரிக்கர் இது குறித்து செய்தி வெளியிட்டார்.   அவர் தனது பதிவில், “நான் நலமுடன் வீடு திரும்பியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.   நான் நலம் பெற வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் என் நன்றி எனக் குறிப்ப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் 15ஆம் தேதி அவர் கணைய அழற்சி பாதிப்பினால் மும்பையில் உள்ள மருத்துவ மனியில் அனுமதிக்கப்பட்டு நிதி நிலை அறிக்கை அளிப்பதற்காக வீடு திரும்பினார்.   அப்போது அவர் உடல் நலம் கருதி சட்டசபை தொடர் 4 நாட்களாக குறைக்கப்பட்டது.