டெல்லி: பிரிவினை நடைபெறாவிட்டால் முஸ்லிம் லீக் நாட்டை செயல்பட அனுமதித்து இருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: என் பார்வையில் இந்தியா பகிர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஏனென்றால் இந்தியா பகிர்வு செய்யப்படா விட்டால் நாங்களே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்திருக்கும்.

மேலும், முஸ்லீம் லீக் நாட்டை செயல்பட அனுமதிக்காது என்ற எளிய காரணத்திற்காக இது சாத்தியமில்லை. எனவே இதை நீங்கள் பெரிய அளவில் கற்பனை செய்து கொள்ளலாம்,

இந்தியா பிரிக்கப்படாவிட்டால், முஸ்லீம் லீக் எங்களுக்கு மிகவும் இடையூறாக மாறி, அரசின் நிலைமை மோசமடைந்திருக்கும். மகாத்மா காந்தி மற்றும் ஜின்னாவை இரண்டு “சிறந்த” மற்றும் “கடினமான” நபர்கள் ஆவர்.

அவர்களுடன் வாழ்வது சாத்தியமில்லை. ஏனென்றால் காந்தி உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர். ஜின்னாவின் மனோபாவம் மிகவும் ஆக்ரோஷமானது. நான் நிச்சயமாக அவருடன் பழக மாட்டேன்.

பல வழிகளில், காந்திஜி ஜின்னாவைப் பற்றிக் கொண்டார் என்று நான் சொல்லுவேன். 1944ம் ஆண்டில், காந்தி மலபார் மலையில் உள்ள ஜின்னாவின் வீட்டிற்கு 17 முறை விஜயம் செய்தார். ஆனால் ஒரு முறை கூட ஜின்னா அவ்வாறு செய்தது இல்லை என்றார்.

முகம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், ஒரு தனி தேசத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக நேரடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்போது கொல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இனக் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம்.