கொழும்பு:
லங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட புத்த பிக்கு தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து பெயர், இடம் குறிப்பிடாமல் இலங்கை மூத்த காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்ததாவது:
“12 வயதான சிறுமி கடந்த ஜூலை 10ம் தேதி குறைந்தது 9 பேரால் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அன்று இரவு கூட்டுபாலியல் வன்புணர்வுககு ஆளானார்.
b
பிறகு அந்த சிறுமியை சாலையில் வீசிவிட்டு பலாத்கார கும்பல் ஓடிவிட்டது. மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, அருகில் இருந்த புத்த கோயிலுக்குச் சென்று அங்கிருந்த புத்த பிக்கு ஒருவரிடம் தனது நிலையைச் சொல்லி அழுதிருக்கிறாள்.  ஆனால் அந்த புத்த பிக்குவும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதையெல்லாம் சிறுமியிடம் வாக்குமூலமாக வாங்கிவிட்டோம். இக் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 12 பேரை கைது செய்திருக்கிறோம். கைது செய்யப்பட்ட பெண்தான், பாலியல் தொழிலுக்காக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த சிறுமையை பயன்படுத்தி இருக்கிறார். பாலியல் குற்றத்தை செய்வதற்கு உதவி செய்வதும் ஒரே விதமான குற்றம்தான்.
இக் குற்றத்தில் ஈடுபட்ட புத்த பிக்கு தலைமறைவாகிவிட்டார். அவரைத் தீவிரமாக தேடிவருகிறோம்” என்று . இலங்கை மூத்த காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.