திருவனந்தபுரம்:

உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் செங்கனூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இங்குள்ள வீடுகளின் வாசலில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘‘இங்கே சிறுமிகள் இருக்கிறார்கள். அதனால் பாஜக.வினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய போஸ்டர்கள் பெரும்பாலும் சிபிஎம் ஆதரவாளர்கள், கட்சியினர் வீடுகளில் இடம்பெற்றுள்ளது.

சிபிஎம் எம்எல்ஏ ராமச்சந்திரன் நாயர் மறைவு காரணமாக இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் சிபிஎம் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்க கூடிய தொகுதியாக செங்கனூர் இருக்கும் என்று கூறப்படுகிறது.