கோல்டு கோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா, சிங்கப்பூரின் மெங்யூ யூவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், சவுரவ் கோசல் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.