பெர்லின்

லகின் 4 ஆம் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி தற்போது மந்தநிலையைச் சந்தித்துள்ளது.

இன்று ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இது 0.5 சதவீதமாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது  இது அந்நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குத் தள்ளியிருக்கிறது.

ஜெர்மனி அரசுக்கு  இந்த புள்ளிவிவரங்கள்  மிகப் பெரிய பின்னடைவாகும்.  ஜனவரி இறுதியில் அந்நாட்டு அரசு குளிர்கால எரிசக்தி பற்றாக்குறையை முறைப்படுத்தத் தவறிய நிலையில், அதன் வளர்ச்சி விகிதம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணித்திருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 சதவீதத்தில் இருந்து 0.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தது.  சென்ற ஆண்டை விட இந்த ஏப்ரல் மாதத்தில் விலைகள் 7.2 சதவீதம் அதிகரித்த நிலையில், உயர் பணவீக்கம் நுகர்வோர் செலவினங்களைப் பாதித்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.