கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு, எந்தப் புதிய உடல்நலப் பிரச்சினையும் இல்லையென்றும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், இருதயப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் ப‍ெற்ற கங்குலி, வீடு திரும்பினார். இந்நிலையில், சில நாட்கள் இடைவெளியில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, அவரின் உடல்நிலை குறித்து அவரின் நலவிரும்பிகள் இடையே கவலை எழுந்தது மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களும் பரவின.

எனவே, மருத்துவமனை சார்பில் இதுதொடர்பாக கூறப்படுவதாவது, “சவுரவ் கங்குலி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் உடல்நிலையை பரிசோதனை செய்யவே இன்று அனுமதிக்கப்பட்டுல்ளார். அவரின் உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. நலமுடன் இருக்கிறார். ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் வழக்கமான பரிசோதனைக்காகவே கங்குலி வந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.