மும்பை:

துபாயில் மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு நாளை (28-2-18) மாலை இறுதிச்சடங்கு நடக்க இருக்கிறது. பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை துபாயில் மரணமடைந்தார்.

அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான மூலம் இன்று துபாயில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஸ்ரீதேவி உறவினர்கள், “ஸ்ரீதேவி உடல் நாளை காலை 9.30 மணி முதல் 12.30 வரை மும்பை செலிபிரசேன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது.

மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் , மாலை 3.30 மணிக்கு இறுதி சடங்கு மும்பை வில்லேபார்லே மயானத்தில் குடும்ப பாரம்பரியமுறைப்படி நடந்து, உடல் தகனம் செய்யப்படும்” என்று உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.