சென்னை
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இரவு ரயில்கள் நாளை முதல் டிசம்பர் 14 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில்,
”தாம்பரம் ரயில் நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்குத் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குக் கடற்கரைக்குச் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்’
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel