சென்னை

ன்று முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ. 279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. எனவே சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளது.

சுமார் 7 மாதங்களுக்கு இந்த குறிப்பிட்ட பகுதியில் மின்சார ரயில் சேவை இருக்காது.  சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை வழக்கம்போல இருக்கும்.

சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.