சென்னை

மிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.   இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்பு குறையாததால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலானது.  இந்த முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறையத் தொடங்கி உள்ளது.   தற்போது 27 மாவட்டங்களி9ல் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

நேற்று இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31.5.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14.6.2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.  தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்ல வேண்டும்.  பிளாஸ்டிக் பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

தேநீர்க் கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை. மேலும் பேக்கரிகள், மேலும் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம்.  இந்த கடைகளிலும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் பொது மக்களின் நலன் கருதி,  14.6.2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  ஏற்கனவே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமான பொருட்களுக்குப் பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது”.

என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.