சென்னை

ன்று முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவ்விடங்களை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களுக்காக 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.