சென்னை

ன்று முதல் தீபாவளிக்காக தமிழக அரசுப் போக்குவரத்து சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

தீபாவளி என்பது நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,365 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

மக்கள் சிறப்புப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யத் தயாராக உள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று இந்த சிறப்புப் பேருந்துகள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து இன்று இயக்கப்படுகின்றன.

பயணிகள் அந்தந்த பேருந்து நிலையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பேருந்து  வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பலரும் அரசு பேருந்துகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க முன் வருகிறார்கள்.