சென்னை

ன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

சமூகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். தொடர்ந்து 2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன.

கடந்த 24.7.23 முதல் 4.8.23 வரை முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பிறகு 2-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்றன. இந்த 2-ம் கட்ட முகாமில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 1.54 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இன்று முதல் 3 நாட்களுக்குக் கலைஞர் மகளிர் உரிமத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இதற்காகத் தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பப்படிவத்தை பெற்று முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சிறப்பு முகாம்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.