மங்களூரு:

ர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தனஞ்செய குமார் காலமானார். அவருக்கு வயது 67. இவர் மங்களூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முன்னாள் மத்திய மந்திரியான தனஞ்செய குமார்  நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல் காத்ரி கம்பாலா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதன்பின்னர் சொந்த ஊரான வேணூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.