ஜெய்ப்பூர்: கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

ஜெகநாத் பகாடியா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையின் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நள்ளிரவு நேற்று இரவுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெகன்நாத் மறைவையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ஜெகநாத் பகாடியா கடந்த 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.  மேலும் அரியானா மற்றும் பீகார் மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.