ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 அரசியல்வாதியும், ஆந்திர முன்னாள் முதல்வருமான மறைந்த  என்.டி.ராமராவ் மகள் உமா மகேஸ்வரி  காலமானார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வாழ்ந்து வந்த  மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தனது விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

“முதற்கட்ட விசாரணையின்படி என்.டி.ஆரின் 12வது மகளான உமா மகேஸ்வரி ஏற்கனவே கடந்த சில மாதங்களாக உடல் ரீதியாக பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) நிறுவனர் என்டிஆரின் நான்கு மகள்களில் இவர் இளையவர். என்.டி.ஆர் மகளின் திடீர் தற்கொலை முடிவு தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.