சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கிராம சபை கூட்டத்தைப் போல நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை கிராமசபை கூட்டம் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டிட்ல  நகர சபை, மாநகர சபை கூட்டங்களை நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் நவம்பர் 1ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் நகரசபை மற்றும் மாநகர சபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரசபை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவர்  பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6வது வார்டு நகர சபை கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், கிராம சபை கூட்டம் போன்றே நகர சபை கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.