கன்னியாகுமரி

தொடர் மழையால் அணைகள் நிரம்பி நீர் திறக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்த மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது.

மாவட்டத்தின் முக்கிய அணை களில் இருந்து 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பழைய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  எனவே 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.