சென்னை:
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள் பலா் தங்களுடைய பயண தேதிகளை மாற்றி அமைத்தனா். இதையடுத்து அந்தமானுக்கு பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால்,சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்தமான், நிக்கோபர் தீவுகளின் அருகே வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.அது புயலாக உருவாகி,அந்தமான், நிக்கோபா் பகுதிகளை தாக்கும் ஆபத்து உள்ளது.இதையடுத்து அந்தமான்,நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் நேற்று 19 ஆம் தேதியிலிருந்து வரும் 22 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை மூடப்பட்டுள்ளன.எனவே அந்தமான்,நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் இந்த நாட்களில் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.