நாக்பூர்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம் வந்து அந்த விமானம் பின்னர் கோச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 9.31 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். மகாராஷ்டிர மாநில வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் கொச்சி விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் விடுக்கப்பட்டதால் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் மராட்டியத்தின் நாக்பூர் விமான நிலையத்தில் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமானம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை என அதிகாரபூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.