சென்னை
மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் செயலிழப்பால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திடீரென இன்று மதியம் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் முடங்கியதால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கின.
இந்த விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தபாதிப்பு காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கு கையால் எழுதப்பட்டுள்ள போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
விமான சேவைகள் சென்னையில் மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பாதிப்பை சரிசெய்யும் பணிகளில் விண்டோஸ் நிறுவனம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
[youtube-feed feed=1]