வாஷிங்டன்

திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்க்குள்ளனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாதிரி படம்

அமெரிக்க ஊடகங்கள்,

“செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது.   விமானத்தில் ஏற்பட்ட ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கிச் செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கிப் பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் விமானம் வர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விமானத்தில் நான்கு பேர் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது”

என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்வு செப்டம்பர் 11 நிகழ்வை இந்த சம்பவம் ஞாபகப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள்தாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.