சென்னை

மிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1000ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 ஆகி உள்ளது.

இன்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆகி மொத்தம் 326 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதற்கு நடுவே ஆறுதல் அளிப்பது போல் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 19,333 ஆகி உள்ளது.